Search Header Logo

பழமொழி படிவம் 2

Authored by Ranjini Mahaivam

Other

7th - 9th Grade

Used 13+ times

பழமொழி படிவம் 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் உரையாடலில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

முரளி: ராமு உனக்குச் செய்தி தெரியுமா? தியாகுவிற்குப் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம்.

ராமு : __________________ என்பது போல அவன் தன் செயலுக்கான பலனைப்பெற்று விட்டான்.

ஆடமாடாதவள் கூடம் கோணல் என்றாளாம்

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

அடாது செய்பவன் படாது படுவான்

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் சூழலுக்கேற்ப பழமொழியைத் தெரிவு செய்க.

ஆயிரம் ஆசை வார்த்தைகள் கூறினாலும் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பது பாவம் என்ற கொள்கையைக் கொண்ட ரவி, தன் நண்பனின் திட்டத்திற்கு உடன்பட மறுத்தான்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

தன் கையே தனக்கு உதவி

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை என்பதை உணர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை இளம் வயது முதற்கொண்டே வீட்டில் பலநடவடிக்கைளில் ஈடுபடுத்தி வருகின்றனர்

கண்டதைக் கற்க பண்டிதனாவான் என்பதை உணர்ந்த சேகரன் தன் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கின்றார்

அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கு ஏற்பக் காவல் துறை அதிகாரியான அந்த இளைஞர் பலராலும் போற்றப்படுகிறார்.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பதை உணர்ந்த அன்பரசி தினமும் மறக்காமல் சோறு சாப்பிடுவாள்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியைச் சரியாக நிறைவு செய்க.


ஆலும் வேலும் ___________ நாலும் இரண்டும் ____________

காலுக்குறுதி, பல்லுக்குறுதி

வாய்க்குருசி,வயிற்றுக்குறுதி

பல்லுக்குறுதி, சொல்லுக்குறுதி

மண்ணுக்குறுதி, மனதுக்குறுதி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


வாழ்க்கையில் எவ்வளவு துன்பப்பட்டாலும் பொய் சொல்லக்கூடாது என்ற தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தார் மன்னர் அரிச்சந்திரன்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

தன்கையே தனக்கு உதவி

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

- தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே

தீருவர்.

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.- இளமையில் சோம்பல்கொண்டு உழைக்காமல் இருந்தால், முதுமையில்

வறுமையில் வாட நேரிடும்

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.

- ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள்

முழுவதும் தொடரும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கோமதி கணிதப் பாடத்தில் மிகவும் குறைந்த புள்ளிகளையே பெற்று வந்தாள். அவள் ஆசிரியர் தொடர்ந்து முயற்சி செய்யும்படி ஆலோசனை கூறினார். கோமதியும் அதிகமான கணிதப்பாடப் பயிற்சிகளைச் செய்தாள். இப்பொழுது கணிதப் பாடத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று வருகிறாள்.

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?